தேசிய எரிசக்தி கருத்தரங்கின் நோக்கமானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தலையீடுகளை தேசிய முன்னுரிமைகளுடன் சீரமைக்கக்கூடிய ஓர் உயர் மட்ட உரையாடலைக் கையாளுதலாகும். இது நிலையான ஆற்றல் வளர்ச்சியின் குறிக்கோள்களை உயர் மட்ட உரையாடல்கள் மூலம் தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் முன்னெடுக்கின்றது.
தேசிய எரிசக்தி கருத்தரங்கு மற்றும் கண்டுபிடிப்பு மன்றம் 2019 பி.எம்.ஐ.சி.எச். சினிமா ஹாலில் 13 மற்றும் 14 ஆம் தேதிகள் டிசம்பர் 2019 அன்று மதியம் 1 மணி முதல் நடைபெறும்.
இது தொடர்பான வெளியீடுகள் இங்குள்ளது.
வீடியோக்களின் மூலமும் இடையீடு மிக்க கண்காட்சிப் பொருட்கள் மூலமும் அதன் சொந்த உற்பத்திகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சித் தீவுகள் மூலமும் விதுல்க சக்திக் கண்காட்சியானது வாடிக்கையாளர்களுக்கும் ஏனைய ஆர்வமுள்ள தரப்பினருக்கும் சக்தி வினைத்திறன் பற்றிய தலைப்பினைப் புலப்படக்கூடிய அனுபவமாக மாற்றி வருகின்றது. அதன் நான்கு கட்ட அணுகுமுறையின் மையத்திலே, புலமைமிக்க இடையீட்டு வடிவமைப்பும் சக்தி வினைத்திறன்மிக்க உற்பத்திகளும் தீர்வுகளும் நிலைபெறுதகு சேவைகளும் நன்கு நிலைபெற்ற பயிற்சியும் உள்ளன.
சக்தித் துறை நிறுவனங்களும் உபகரண விநியோகத்தர்களும் உற்பத்தியாளர்களும் புத்தாக்குனர்களும் கல்வியியலாளர்களும் அவர்களின் தொழில்நுட்பங்களையும் கிரமமான சக்தி உற்பத்திகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்கும் வலையமைப்பு உருவாக்குவதற்கும் விதுல்கா தனித்துவமான வாய்ப்பினை வழங்குகின்றது.
இந்தக் கண்காட்சியானது பின்வருவனவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது: